மழை காரணமாக திருப்பூரில் பள்ளிகளுக்கு ஹாஃப் டே லீவ்

வெள்ளி, 1 அக்டோபர் 2021 (13:20 IST)
திருப்பூர் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு அரை நேரம் விடுமுறை அளித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். 

 
நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து இதையடுத்து வெள்ளக்காடாக இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கனமழை காரணமாக கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். 
 
இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு அரை நேரம் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மழை காரணமாக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்