இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு மாணவியை கற்பழித்த குற்றத்துக்காக 1 ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரமும் அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று கூறினார்.
மேலும், மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் அபராதம் கட்ட தவறினால் 2 ஆண்டுகாலம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பாலியல் பலாத்காரம் குற்றத்துக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதில் அபராதம் கட்டாவிட்டால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.