சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா கடந்த 15-ஆம் தேதி பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 தட்டு, 1 கப் மற்றும் கைதிகளுக்கான சீருடை வழங்கப்பட்டுள்ளது. நீல கலரில் பார்டர் போட்ட வெள்ளை சேலையைத்தான் இருவரும் அணிந்து உள்ளனர். சசிகலா மற்றும் இளவரசி விருப்பப்பட்டால் சிறையில் வேலை பார்க்கலாம் ஆனால் கட்டாயம் கிடையாது.