வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படவுள்ள நிலையில், இதை காண்பதற்காக நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் ஜனவரி 25 ஆம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் இந்த அதிசய நிகழ்வை கண்டு களிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அனைவருக்கும் கண்ணுக்கு விருந்தாக அமையும் எனவும், இதே போன்ற ஆறு கோள்களின் அணிவகுப்பு மீண்டும் பிப்ரவரி 28 மற்றும் ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களிலும் நடைபெறும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.