அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்..!

செவ்வாய், 23 மே 2023 (19:15 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒரு பக்கம் பகலில் வெயில் அடித்து கொளுத்தினாலும் இரவில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, சிவகாசி, நெல்லை ஆகிய பகுதிகளில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்