சென்னையின் பல பகுதிகளில் கனமழை.. மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி..!

வியாழன், 14 செப்டம்பர் 2023 (07:15 IST)
நேற்று இரவு சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்த நிலையில் ஒரு சில இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
 
 வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. 
 
அந்த வகையில் நேற்று இரவு தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.  
அதேபோல் சென்னை தேனாம்பேட்டை, மைலாப்பூர், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. 
 
இந்த நிலையில் பலத்த காற்று வீசியதால் மாடம்பாக்கம் சேலையூர் கிழக்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதியில் இருந்தனர். ஆனால் சில மணி நேரத்தில் காற்று நின்றவுடன் மீண்டும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்