சென்னையில் சிலமணி நேரத்தில் இடியுடன் மழை.. கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பா?

புதன், 22 மார்ச் 2023 (16:56 IST)
சென்னையில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் வளிமண்டலத்தின் மேல் நிலவும் கீழடுக்கு திசை காற்று காரணமாக சென்னையில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சற்றுமுன் 40 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்