இன்னும் 2 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் கொட்ட போகும் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

Mahendran

சனி, 13 ஜூலை 2024 (17:28 IST)
இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் காற்றின் வேக திசை மாறுபாடு காரணமாகவும் தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதேபோல் நாளை தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், ஜூலை 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பல இடங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்