அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை.. 12 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

திங்கள், 10 ஜூலை 2023 (07:48 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
நேற்று இரவு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. 
 
நீலகிரி,கோவை,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,மயிலாடுதுறை,கடலூர், விழுப்புரம்,சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,மற்றும் திருவள்ளூர் ஆகிய 12 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வர பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேகம் ஆறுபாடு காரணமாக 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்