தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் மழைக்கு வாய்ப்பு

புதன், 22 ஜூன் 2016 (16:50 IST)
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகத்தை ஒட்டியுள்ள காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும். பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் இந்த மழை இருக்கும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்