கருணாநிதியை நேரில் பார்த்தேன் : ராகுல்காந்தி பேட்டி

செவ்வாய், 31 ஜூலை 2018 (16:42 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக இருப்பதாக காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

 
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதிக்கு கடந்த 4 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவரது உடல்நிலை மோசமடைந்தாலும், மருத்துவர்களின் சிகிச்சை காரணமாக அவர் உடல் நிலை சீரான நிலையில் இருந்து வருகிறது. 
 
தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரலங்கள் பலரும் தினமும் மருத்துவமனை வந்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து செல்கின்றனர். 
 
இந்நிலையில், கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்தார். டெல்லியிலிருந்து சரியாக  3.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து காரில் நேராக காவேரி மருத்துவமனை சென்றார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினோடு சேர்ந்து கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு சென்று சந்தித்தார்.
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “கருணாநிதியை தீவிர சிகிச்சை பிரிவில் நேரில் சென்று பார்த்தேன். அவர் நன்றாக இருக்கிறார். தமிழக மக்களை போல் அவரிடம் நல்ல மன உறுதி இருக்கிறது. திமுகவுடன் காங்கிரஸ் பல வருடங்களாக நட்பு பாராட்டி வருகிறது. கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது” என அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்