ஜெயபாலுக்கு கொரோனா கன்ஃபார்ம்: கலக்கத்தில் சக சட்டமன்ற உறுப்பினர்கள் !!

சனி, 25 ஜூலை 2020 (08:17 IST)
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 
 
புதுச்சேரி கதிர்காமம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபாலும் இரு நாட்களாக காய்ச்சல் இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை பாசிடிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதனால் அவர் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் சட்டமன்ற உறுப்பினர்கள் கலக்கமடைந்துள்ளனர். ஏனெனில் இவர் கடந்த 20 ஆம் தேதி துவங்கிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் மற்றும் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்று உள்ளார்.
 
எனவே அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக மருத்துவப் பரிசோதனை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்