பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!

வியாழன், 27 ஜூலை 2023 (15:12 IST)
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் இஸ்மாயில் என்பவரது வீட்டில் திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் அமலாக்கத்துறை அடிக்கடி அதிரடியாக சோதனை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்
 
இந்த சோதனையின் அடிப்படையில் இஸ்மாயில் அவர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
விசாரணைக்கு பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்