வேலையை காட்டிய ஈபிஎஸ் படையினர்? கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் போஸ்டர்!!

சனி, 15 ஆகஸ்ட் 2020 (12:55 IST)
அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு. 
 
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதுகுறித்து பொதுவெளியில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கியுள்ளது. 
 
இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார்? என துணை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
அதோடு துணை முதல்வருடனான ஆலோசனைக்குப் பின் அமைச்சர்கள் முதலமைச்சருடன் ஆலோசிப்பார்கள் என தகவல். அதன்படி, மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனிடையே பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லம் அருகே ’அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்’ என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்