காவலர் தூக்குப் போட்டு தற்கொலை

செவ்வாய், 2 நவம்பர் 2021 (20:24 IST)
திருமங்கலத்தில் காலவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேதமாணிக்கம்(34). இவரது மனைவி மாலதி(32) இவர்களுகு 2 மகள்கள் உள்ளனர்.

இவர் அண்ணாநகர் காவல்நிலையத்தில் முதுநிலை காவலராகப் பணியாற்றி வந்தார். இவர் திருமங்கலத்தில் உள்ள ஒரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் மனைவியுடன் அவருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்றிரவு பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய அவருக்கு மீண்டும் மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதமாணிக்கும் தனது அறைக்குச் சென்று அறையைப் பூட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

அவரை அருகில் வசிப்போர் வந்து மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2:30 மணியளவில் உயிரிழந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்