சுவாதி கொலை தொடர்பாக, சென்னை போலீசார் பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளியின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிட்டும் அவனை பற்றி யாரும் சரியான தகவல்களை கொடுக்காதது போலீசாருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
போலீசார் கொடுத்துள்ள தொலைபேசி எண்களில் சிலர் அழைத்தாலும், துப்புக் கிடைக்கும் வகையில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. சுவாதியின் செல்போன் பதிவுகளை ஆராய்ந்தும் பெரிய பலன் இல்லை. வாட்ஸ்-அப் சேட்டிங் விபரம் கிடைத்தால் அதில் கொலையாளி பற்றிய எதாவது தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது.