கமல்ஹாசன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

வெள்ளி, 5 ஜனவரி 2018 (13:44 IST)
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மத்திய மாநில அரசை தொடர்ந்து விமர்சித்த வண்ணம் உள்ளார். இதனையடுத்து பிரபல வார இதழில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த கமல் ஆர்.கே.நகரில் டிடிவி தினரனின் வெற்றி கொண்டாடப்படுவது அவமானப்பட வேண்டிய விஷயம் என்றும் தினகரனின் வெற்றி ஆகப்பெரிய அவமானம் என்றார். ஆங்கிலேயர் நம்மிடம் ரோட்டையும், ரயில் நிலையத்தையும் விட்டுச்சென்று விலைமதிப்பில்லா கோஹினூர் வைரத்தை திருடிச் சென்றனர். 
 
அதே போல் ஆர்.கே நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து மக்களின் விலைமதிப்பில்லா ஓட்டுகளை சிலர் பறித்து சென்றது வெட்கக்கேடான விஷயம் என்றார். அது திருடனிடம் பிச்சை எடுப்பது போன்றது என்று கடுமையாக விமர்சித்தார். ஒட்டுக்கு பணம் வாங்கிய மக்கள், அவர்களின் தற்காலிக பிரச்சனைகளுக்கு மட்டுமே தீர்வு காண முடியுமே தவிர, பிற்காலத்தில் துயரப்பட வேண்டியிருக்கும் என்றார். மக்களை இழிவுபடுத்திய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலையைச் சேர்ந்த வழக்கறிஞரான சாதிக் பாட்ஷா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்நிலையில் வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடரில் இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை குறிப்பிட்டதற்காக இந்து அமைப்புகள் கமல்ஹாசனை தாக்கிப் பேசி வந்தனர். இந்த சூழ்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கமல்ஹாசன் இல்லத்தை இந்து பாதுகாப்பு கட்சியினர் இன்று முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து கமல்ஹாசன் வீட்டின் முன்பு இன்று காலை முதல் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்