தமிழகத்தையே அதிர வைத்த இந்த வழக்கு, தினமும் ஒவ்வொரு தகவல்களுடன், பல்வேறு கேள்விகளுடனும், மார்மங்களுடனும் நகர்ந்து வருகிறது. இந்த கொலையில் காவல்துறை விசாரிக்கும் முக்கியமான இரு நபர்கள் ராம்குமார் மற்றும் சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்.
இப்படி இந்த வழக்கில் முக்கியமான நபராக உள்ள பிலால் மாலிக்கிடம் நேற்று திடீரென காவல்துறை விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. மேலும் வரும் 8-ஆம் தேதி ராம்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதால் அன்றைய தினமும் பிலால் மாலிக் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.