பொள்ளாச்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வரும் முருகானந்தன் மகள் சரிகா, நேற்று பள்ளி திறந்தவுடன் பள்ளிக்கு சென்று, மாலையில் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், பெற்றோர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சரிகா தூக்கில் தொங்கியபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து, காவல்துறை சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணைகள், சரிகாவும் அவரது ஆண் நண்பரும் சண்டை போட்டுக் கொண்டதாகவும், அதனால் மனமுடைந்த சரிகா தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.