சென்னை சி பி ராதாகிருஷ்ணன் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்துள்ளது. அதனால் மக்கள் இன்று காலை வழக்கம் போல தடுப்பூசிப் போட்டுக் கொள்வதற்காக வந்துள்ளனர். ஆனால் தாமதமாக வந்த அதிகாரிகள் தடுப்பூசி இருப்பில் இல்லை எனக் கூறியதால் ஆத்திரம் அடைந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.