ஆழ்வார் பேட்டையில் மக்கள் சாலையில் தர்ணா… எதற்காக தெரியுமா?

புதன், 21 ஏப்ரல் 2021 (12:30 IST)
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி இல்லை என்று சொன்னதால் அவர்கள் சாலையில் போராட்டம் செய்தனர்.

சென்னை சி பி ராதாகிருஷ்ணன் சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்துள்ளது. அதனால் மக்கள் இன்று காலை வழக்கம் போல தடுப்பூசிப் போட்டுக் கொள்வதற்காக வந்துள்ளனர். ஆனால் தாமதமாக வந்த அதிகாரிகள் தடுப்பூசி இருப்பில் இல்லை எனக் கூறியதால் ஆத்திரம் அடைந்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு டோக்கன் அளிக்கப்பட்டு அதன் படி தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்