யார்யா படம் டிராப்புனு கிளப்பிவிட்டது… அலறி அடித்து விளக்கம் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

புதன், 21 ஏப்ரல் 2021 (12:11 IST)
விஜய் தேவாரகொண்டா நடிப்பில் சுகுமார் இயக்குவதாக இருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

விஜய் தேவாரகொண்டா தெலுங்கு சினிமாவின் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். வரிசையாக கமர்ஷியல் கிங் எனசொல்லப்படும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இப்போது பூரி ஜெகன்னாத் படத்தில் நடிக்கும் அவர் அடுத்து சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.

ஆனால் அந்த படத்தில் அவருக்குப் பதிலாக அல்லு அர்ஜுன் நடிப்பார் என சில தினங்களாக செய்திகள் பரவின. இந்நிலையில் அதை மறுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் விஜய் தேவாரகொண்டா மற்றும் சுகுமார் கூட்டணியில் படம் உருவாகும் என விளக்கம் அளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்