திமுக கூட்டணிக்கு 'தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு' ஆதரவு: அறிக்கை வெளியீடு..!

Siva

திங்கள், 15 ஏப்ரல் 2024 (14:08 IST)
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது ஆதரவு என்று தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு என்று தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி செந்தில்குமார் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டமைப்பு ஆதரவு அளிப்பதாகவும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவதாகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் உறுதி அளித்துள்ளனர்

ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாளித்துள்ள நிலையில் தற்போது தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பும் ஆதரவளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்