இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தினார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேலாக ஜெயலலிதாவின் சமாதியில் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தனது மனக்குமுறல்களை கொட்டினார். அவர் பேசியபோது, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கினார்கள் என்றும், மக்கள் விரும்பினால் எனது ராஜினாமாவை திரும்ப பெறுவதாகவும் கூறினார். மேலும் தனிப்பட்ட முறையில் என்னை அவமானப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனா முதலமைச்சராக அமரவைத்துவிட்டு என்னை அதிகம் அவமானப்படுத்தினர். என்னால் கட்சிக்கு எந்த அவமானமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தேன் என்றார்.
முத்ல்வரின் இந்த பேட்டி குறித்து தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியபோது, அதிமுக தொண்டர்களின் மன பிரதிபலிப்பாகவே பன்னீர் செல்வம் பேட்டி அமைந்துள்ளது. முதல்வரையே மிரட்டியுள்ளார்கள். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், ஆரம்பம் முதலே பன்னீர் செல்வத்தை சுதந்திரமாக செயல்படவிடவில்லை என்று கூறினார்.