செல்போன் பறித்த கொள்ளையனின் விரலைக் கடித்து துப்பிய வாலிபர் !

சனி, 25 ஜனவரி 2020 (19:48 IST)
டெல்லியில் செல்போன் பறித்தவனின் கை விரலை, வாலிபர் கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றில் தேவ்ராஜ் என்ற நபர் அமர்ந்திருந்தார். அப்பொது அவரை நெருங்கிய ஒரு நபர் அவரது வாயைப் பொத்திக் கொள்ள  இன்னொருவர் அவரது முகத்தில் தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றுள்ளார்.
 
அதில், ஆத்திரமடைந்த நபர், தன் வாயைப் பொத்தியவரின் விரலைக் கடித்து துப்பினார்.அருகில் நின்றிருந்த மக்கள் காயம் அடைந்தவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  மேலும், மருந்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விரைவில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்