இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ், அதிமுகவின் இரு அணிகள் சார்பாக போட்டியிடும் டிடிவி தினகரன், மதுசூதனன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக பார்க்கப்படுகிறார்கள்.
எதிர்ப்பு ஓட்டுகளை சிதற விடாமல் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனை வெற்றி பெற வைக்க அந்த அணியினர் தீவிரமாக உள்ளனர். தீபாவல் தங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோய் விடக்கூடாது என்பதால் அவரை வாபஸ் பெற வைக்க ஓபிஎஸ் அணியினர் முயற்சி செய்து வருகின்றனர். இதனை தனியார் தொலைகாட்சி பேட்டி ஒன்றில் மாஃபா பாண்டியராஜனும் உறுதி செய்தார்.