அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் முக்கிய வேண்டுகோள்!

புதன், 15 ஜூன் 2022 (21:16 IST)
அதிமுக தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 
 
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதிமுகவில் ஒற்றை தலைவர் என்றால் அது ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் இருவரில் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு ஓ பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்