அதில், முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று வீடு திரும்பும் வரை அவரிடம் இருந்த அனைத்து இலாகாக்களையும் நிதியமைச்சர் பன்னீர் செல்வம் கவணிப்பார். முதல்வர் ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சராக நீடிப்பார். அமைச்சரவை கூட்டங்களுக்கு பன்னீர் செல்வமே தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின் பெயரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.