கேட்டு கைதட்டு வாங்கிய ஓ பன்னீர்செல்வம்… பட்ஜெட்டுக்கு இடையே கலகல!

புதன், 24 பிப்ரவரி 2021 (07:30 IST)
தமிழகத்தின் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 2021 -22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது வனத்துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட அவர் தமிழகத்தில் 6.12 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்க படுவதாகக் கூறினார். அப்போது யாருமே கைதட்டாததை அடுத்து சிறிது நேரம் காத்திருந்த பக்கத்தில் இருந்தவர்களைப் பார்த்து ‘கைதட்டுங்கண்ணே.. கைதட்டுங்கண்ணே’ எனக் கூறினார்.

அதன் பின்னரே அனைவரும் கைதட்டினர். இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்