1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

வியாழன், 5 மே 2022 (11:57 IST)
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் விரைவில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தொடங்க உள்ளது 
 
இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக தேர்வு அன்று மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்றும் அதுவரை வீட்டிலேயே இருந்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராகவும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இறுதி தேர்வுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என்றும் பிற நாட்களில் வகுப்புகள் ஏதும் நடைபெறாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்