இதுக்கு பொங்கல் தொகுப்பு கொடுக்காமலே இருக்கலாம்.. அரசை சீண்டும் ஓபிஎஸ்!!

செவ்வாய், 11 ஜனவரி 2022 (10:45 IST)
தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்தது நியாயமா என ஓபிஎஸ் கேள்வி. 

 
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் அரிசி அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்தது குறித்து ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது, ரேஷன் கடையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செவது நியாயமா? 
 
மக்களுக்கு வழங்கிய பொங்கல் பொருட்களில் இந்தி, கன்னடம் போன்ற மொழிகளே இடம் பெற்றுள்ளன. இதனால் பொங்கல் தொகுப்புக்கு பதில் ரூ.1,000 ரொக்கமாக கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என மக்கள் கூறுவதாக தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்