பண்ருட்டி ராமச்சந்திரன் - ஓ.பன்னீர் செல்வம் திடீர் சந்திப்பு: ரகசிய ஆலோசனையா?

புதன், 14 செப்டம்பர் 2022 (19:35 IST)
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி பிரிவு மற்றும் ஓ பன்னீர்செல்வம் பிரிவு என இரண்டு பிரிவாக பிரிந்து இருந்தாலும் எடப்பாடிபழனிசாமி பிரிவில் தான் அதிக கட்சியினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் அதிமுக அலுவலகம் ,இடைக்கால பொதுச்செயலாளர் போன்ற வழக்குகளிலும் எடப்பாடிபழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கிட்டத்தட்ட அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக ஒரு சில அதிரடி முடிவுகளை எடுக்க ஓ பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
அதன் முதல்கட்டமாக சென்னை அசோக் நகரில் அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் ஓ பன்னீர்செல்வம் சென்று அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இருவரும் சில மணி நேரம் ரகசிய ஆலோசனை செய்ததாகவும் இதனை அடுத்து சில அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்