மாண்டஸ் புயல் எதிரொலி: வெறிச்சோடி கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (08:25 IST)
மாண்டஸ் புயல் எதிரொலி: வெறிச்சோடி கிடக்கும் கிழக்கு கடற்கரை சாலை
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் குறைவாகவே பயணம் செய்து வருகின்றன. 
 
இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் வெறிச்சோடிக் உள்ளது என்றும், வாகன போக்குவரத்து இன்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இன்று மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அந்த பகுதியில் எந்தவித வாகன போக்குவரத்தும் குறிப்பாக  கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு காவல் நிலையம் அருகே மரம் விழுந்து, பின்னி மில் சுற்றுச்சுவர் சேதம் அடைந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தினர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்