தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (18:29 IST)
தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் மீண்டும் நோயாளிகளால் நிரம்ப ஆரம்பித்துள்ளன. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ‘ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பதே இல்லை’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்