அதிமுக ஆதரவு இல்லாமல் இனி மத்தியில் ஆட்சி இல்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திங்கள், 3 செப்டம்பர் 2018 (07:34 IST)
பாராளுமன்ற தேர்தல் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இப்போதே நாடாளுமன்ற வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டது. அதேபோல் மாநில கட்சிகளும் தங்கள் வலிமையை நிரூபிக்க தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் மத்தியில், இனிமேல், அதிமுக ஆதரவு கொடுக்கும் கட்சி மட்டுமே  ஆட்சி செய்ய முடியும் என்றும், அப்போது, கண்டிப்பாக, மத்திய அமைச்சர் பதவிகளை கேட்டுப்பெறுவோம் என்றும், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என கருதப்படும் நிலையில் பாஜகவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே இந்த அறிவிப்பு கருதப்படுகிறது.

தற்போதைய மக்களவையில் திராவிட கட்சிகளின் எம்பிக்கள் யாரும் அமைச்சராக இல்லை என்பதும், பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே தமிழகத்தில் இருந்து அமைச்சராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடுத்த அமைச்சரவையில் காங்கிரஸ் மற்றும் பாஜக என எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் திமுக அல்லது அதிமுகவை சேர்ந்த எம்பிக்கள் கணிசமான அளவில் மத்திய மந்திரிசபையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்