நித்யானந்தாவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரல்…

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:57 IST)
நித்யானந்தாவின் புதிய புகைப்படங்களை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் குஜராத் ஆசிரம் வழக்கு ஆகிய வழக்குகளால் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி நித்யானந்தா, ’கைலாஷா’ என்ற தனிநாட்டை அமைத்துள்ளதாக கூறியதோடு அந்த நாட்டின் கரன்சியையும் சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ஐநாவின் அனுமதி பெற்ற இந்த நாட்டில் விரைவில் மக்கள் குடியேறுவார்கள் என்றும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் அவர் பிரகடனப்படுத்திக் கொண்டார்

இந்நிலையில், தலைமறைவாக இருந்தாலும் நித்யானந்தா சமூக  வலைதளங்கில் அவ்வப்போதும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலை வெங்கடாச்சலபதி போன்று நித்தியானந்தாவின் புதிய ஆடை அலங்காரங்கள் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்