இனிமேல் மழை இல்லை.. கொளுத்தப்போகிறது வெயில்.. வானிலை மையம் தகவல்..!

சனி, 29 ஜூலை 2023 (15:34 IST)
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு நன்றாக வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் அதனால் கோடை வெப்பத்திலிருந்து மீண்ட பொதுமக்கள் குளிர்ச்சியான வெப்பநிலையை அனுபவித்து வந்தார்கள் என்பதையும் பார்த்து வந்தோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயல்பை விட இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் ஒரு சில நாட்களில் மீண்டும்  குளிர்ந்த வெப்ப நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்