10 ஆண்டுகளுக்கு நான் தான் முதலமைச்சர்: சொன்னது யார் தெரியுமா?

திங்கள், 8 பிப்ரவரி 2021 (20:09 IST)
பத்து ஆண்டுகளுக்கு நான்தான் முதலமைச்சர் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார் 
 
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்கள் உடல் நலம் கருதி விரைவில் அவருடைய மகனுக்கு முதல்வர் பதவியை கொடுப்பார் என்ற தகவல் அம்மாநில ஊடகங்களில் கசிந்து வருகிறது 
 
இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் ஆக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பதவி வகிக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார் 67 வயதாகும் சந்திரசேகரராவ் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி தனது மகன் கே டி ராமராவை முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த தகவலை மறுத்த அவர் தெலுங்கானா முதலமைச்சர் ஆக அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்க உள்ளதாகவும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அப்படி ஏதேனும் முதலமைச்சர் பதவியில் மாற்றம் தேவை என்றால் எம்எல்ஏக்கள் அனைவரிடமும் தெரிவித்து அதன் பின் முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்