கொரோனா பரவலால கல்லூரிகளுக்கு புது கட்டுப்பாடுகள்!!

வெள்ளி, 10 டிசம்பர் 2021 (12:05 IST)
சில கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கொரோனா பரவல் சமீபமாக மீண்டும் அதிகரித்து வருவதால் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

 
அண்ணா பல்கலை கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை கழகத்தை தவிர சில கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் கொரோனா பரவல் சமீபமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. 
 
எனவே இதனை கட்டுப்படுத்தும் வகையில் கல்லூரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. இதனை கல்லூரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்துள்ளார். அந்த கட்டுப்பாடுகள் பின்வருமாறு...
 
1. கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை
2. கல்லூரி விடுதிகளில் கூட்டமாக உணவருந்த தடை
3. சுழற்சி முறையில் சமூக இடைவெளியுடன் வகுப்பு
4. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்