இரண்டு தமிழர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

புதன், 18 ஆகஸ்ட் 2021 (19:09 IST)
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவரும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

எனவே ஒவ்வொரு ஆசிரியர் தினத்தன்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு திருச்சி மாவட்டம்,பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியை ஆஷா தேவி, மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லலிதா ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதனால் இவ்விரண்டு பேருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்