மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன்பு தீ வைத்த மர்ம நபர் கைது.. தீவிர விசாரணை..!

Siva

செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (07:42 IST)
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில் அந்த நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன்பு தீ வைத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகே பிப்ரவரி 6ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருந்த நிலையில் திடீரென அவர் தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை கீழே ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த தீ கொழுந்து விட்டு எரிய எரிய அவர் மேலும் மேலும் பெட்ரோல் ஊற்றியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த பகுதியில் பயங்கரமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில் நல்வாய்ப்பாக கபாலீஸ்வரர் கோயில் கதவுக்கு எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் மயிலாப்பூர் கோவில் அருகே தீ வைத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து கபாலீஸ்வரர் கோவில் முன்பு தீ வைத்தவரை போலீஸ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும்

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்