இந்நிலையில் ஹோட்டல் அறையிலிருந்து அலறியபடி ஓடிவந்த சுப்ரமணி, குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொள்ள விஷம் குடித்துவிட்டதாக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது அறைக்கு ஊழியர்கள் விரைந்தனர். அங்கு கௌசல்யா மற்றும் அவரது இரு மகள்களும் இறந்து கிடந்தனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் சுப்பிரமணி கூறியபோது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கி சொந்த வீடு கட்டினேன். ஆனால் தற்போது சிலர் அந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என பிரச்னை செய்கின்றனர். இதனால் மனமுடைந்த நாங்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தோம். நான் எனது மகள்களும் விஷம் குடித்தோம். எனது மனைவி தூக்கிட்டு உயிரிழந்தார். திடீரென எனக்கு உயிர் பயம் வந்ததை அடுத்து கத்தினேன் என்று கூறினார்.