கொடைக்கானலில் குழந்தைகளுடன் தாய் தற்கொலை: உயிர் பயத்தில் தப்பிய தந்தை

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (13:02 IST)
கொடைக்கானல் லாட்ஜ் ஒன்றில் அம்மா, மகள்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

நாமக்கல் மாவட்டம் வட வத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கவுசல்யா.இவர்களுக்கு ஜனனி, இனியா என்ற இரு மகள்கள் உண்டு.

சுப்ரமணி  நேற்று முந்தினம் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்றார். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். பின்னர் 2 தினங்களாக கொடைக்கானலை ச்ற்றி பார்த்துள்ளனர்.

இந்நிலையில் ஹோட்டல் அறையிலிருந்து அலறியபடி ஓடிவந்த சுப்ரமணி, குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொள்ள விஷம் குடித்துவிட்டதாக ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது அறைக்கு ஊழியர்கள் விரைந்தனர். அங்கு கௌசல்யா மற்றும் அவரது இரு மகள்களும் இறந்து கிடந்தனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் சுப்பிரமணி கூறியபோது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கி சொந்த வீடு கட்டினேன். ஆனால் தற்போது சிலர் அந்த இடம் எங்களுக்கு சொந்தமானது என பிரச்னை செய்கின்றனர். இதனால் மனமுடைந்த நாங்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தோம். நான் எனது மகள்களும் விஷம் குடித்தோம். எனது மனைவி தூக்கிட்டு உயிரிழந்தார். திடீரென எனக்கு உயிர் பயம் வந்ததை அடுத்து கத்தினேன் என்று கூறினார்.

ஆனாலும் சுப்ரமணியின் வாக்குமூலம் உண்மைதானா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்