ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை.. தாய் மகள் பரிதாப பலி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

சனி, 30 செப்டம்பர் 2023 (11:55 IST)
சென்னை அம்பத்தூரில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாய், மகள் ஆகிய இருவரும் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை அம்பத்தூர் அருகே ஏகாம்பரம் நகர் பகுதியைச் சேர்ந்த அகிலா, அவரது மகள் நஸ்ரிபேகம் ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் உள்ள ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பலியாகினர். 
 
ஏசியில் இருந்து வெளியேறிய கரும்புகையால் தாய், மகள் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
அகிலா, அவரது மகள் ஆகிய இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்