மய்யத்துடன் கூட்டணி அமைக்கும் ஆம் ஆத்மி!? – விரைவில் அறிவிப்பு!

சனி, 30 ஜனவரி 2021 (13:48 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி குறித்தும் பேசி வருகிறது. முன்னதாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றபோது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள 7 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் ஆம் ஆத்மி பங்கேற்கும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 21 அன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்