எல்லாரும் உங்க சம்பளத்தை கொடுங்க! – திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

ஞாயிறு, 22 மார்ச் 2020 (15:26 IST)
கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள தின வருமான தொழிலாளர்களுக்கு உதவ மு.க.ஸ்டாலின் திமுக சார்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் அன்றாடம் வேலை பார்த்து பணம் ஈட்டும் அமைப்பு சாரா தொழிலாளிகள், அவர்தம் குடும்பங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். கேரளாவை போல தமிழகத்திலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத நிதி வழங்க வேண்டும் என பலர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் திமுகவினருக்கும், மக்களுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் ”கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் திமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், நாட்டில் உள்ள பணக்காரர்கள், தொழிலதிபர்கள் உழைக்கும் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்