தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்! – முதல்வர் உத்தரவு!

சனி, 5 ஜூன் 2021 (10:25 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. இதனால் தமிழகத்தில் கடந்த கடந்த மே 10 அன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனினும் கொரோனா தாக்கம் குறையாத நிலையில் கடந்த மே 31 ல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தற்போது தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு 7ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தற்போது ஊரடங்கை தளர்வுகளுடன் ஜூன் 14 வரை நீட்டிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீத மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்