மனைவியை சுட்டுக் கொல்ல முயன்ற ...திமுக முன்னாள் பிரமுகருக்கு 3 ஆண்டுகள் சிறை...!

வெள்ளி, 22 நவம்பர் 2019 (15:38 IST)
திமுக முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தனது மனைவியை சுட்டுக்கொல்ல முயன்றதாக அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசித்து வருபவர், அசோகன். இவர், திமுக சார்பில் திருவாரூர் சட்டசபை எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு, இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மது குடித்து வந்து மனைவி மற்றும் மாமியார் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றுள்ளார்.
 
இதுகுறித்து, அவரது மனைவி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், அசோக மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இவ்வழக்கை, சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரித்து வந்த நீதிபதி. ஜெ.சாந்தி, அசோகன் குற்றவாளி என்று கூறி, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்