தேர்தல் தேதி தெரிஞ்சாதான் பொதுத்தேர்வு அறிவிப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:26 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இதுவரை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் தமிழகத்தில் மே 24க்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டே 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்காத சூழலில் இந்த முறை கண்டிப்பாக நடத்தப்படும் என கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் “தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் போதுத்தேர்வு தேதி ,மற்றும் அட்டவணை வெளியிடப்படும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்