சசிகலா குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பான சிபிஐ விசாரணை போன்றவற்றை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என ஓபிஎஸ் அணியினர் கூறினாலும், பேச்சுவார்த்தை தள்ளிப்போவதற்கான காரணம் வேறு என்று தான் அரசியல் வட்டாரத்தில் பேசுகிறார்கள்.
அதாவது ஆட்சியும், கட்சியும் யாருடைய கையில் இருக்க வேண்டும் என்பது தான் உண்மையான பிரச்சனை என்கிறார்கள். கட்சியின் பொதுச்செயலாளர், மற்றும் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் தான் உடன்பாடு வரவில்லை என பேசப்படுகிறது. இரு அணிகளும் முதலமைச்சர் பதவிக்கு கோதாவில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.