பட்டமளிப்பு விழாவில் பாட்டு பாடிய அமைச்சர் ஜெயகுமார்

வியாழன், 12 அக்டோபர் 2017 (10:16 IST)
தமிழக மீன்வளத்துறாஇ அமைச்சர் ஜெயகுமார் ஏற்கனவே சிவாஜி மணிமண்டபம் திறப்புவிழா உள்பட பல நிகழ்ச்சிகளில் பாட்டு பாடியுள்ள நிலையில் இன்று சென்னை கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியிலும் எம்.ஜி.ஆர்., படத்தின் பாடல் ஒன்றை பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.



 
 
எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலான 
 
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயற்காட்டில் 
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்
 
என்ற பாடலை பாடி அந்த அறிவுரையின்படி விவசாயத்தில் தற்போதைய டெக்னாலஜியை பயன்படுத்தி நாம் விவசாயம் செய்தால் நம்முடைய புகழ் அயல்நாட்டில் பரவும் என்று மாணவர்களுக்கு அறிவுரையாக கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்