சமீபத்தில் தலைமைச் செயலாளரை திமுக எம்பிக்கள் டிஆர் பாலு மற்றும் தயாநிதி உள்பட ஒருசில திமுக பிரமுகர்கள் சந்தித்தபோது தலைமைச் செயலாளர் தங்களை அவமரியாதை செய்ததாகவும், தாழ்த்தப்பட்டோர் போல் தங்களை நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஜூலையோடு பதவி முடியவுள்ள நிலையில், பதவி நீட்டிப்பு ஆசையில் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றும் வாலாட்டிக் கொண்டிருக்கும் இன்னும் பல “சண்முகங்களின்” கணக்கும் எடுக்கப்பட்டுதான் வருகிறது என்றும் அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயகுமார். கொரோனா வந்ததில் இருந்து செய்தியாளர்களை முன்பை போல் அடிக்கடி சந்திக்காமல் இருந்த அவர் மீண்டும் மீடியா முன்பு தோன்ற துவங்கியுள்ளார். அவர் கூறியதாவது,